tamilnadu

img

‘7.5 சதவீத  இட ஒதுக்கீட்டில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்’ விஜயபாஸ்கர் நம்பிக்கை

புதுக்கோட்டை:
மருத்துவப் படிப்புக்கான நீட்தேர்வு இட ஒதுக்கீட்டில் ஆளுநர் நல்லமுடிவு எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். 

புதுக்கோட்டையில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்அவர் கூறுகையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் கட்டுக்குள்தான் உள்ளது. ஆனாலும், சவால்நிறைந்த காலக்கட்டங்கள் இனிமேல் தான் தொடங்குகின்றன. பண்டிகை காலம், பருவமழை காலங்கள் தொடங்கஉள்ளன. மேலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.நீட் தேர்வு முடிவுகள் வெளியீட்டு விவகாரத்தில் எந்த குளறுபடியும் இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கால அவகாசம் உள்ளது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரியைகொண்ட மாநிலம் தமிழகம்தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.ரெம்டெசிவர், லோபினாவிர், ரிட்டோனாவிர் போன்ற கொரோனா தடுப்பூசிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் நல்ல பலனை அளிக்கிறது என்பதுதான் தமிழக சுகாதாரத்துறையில் நிலைபாடாக உள்ளது. நோய்த் தன்மை தீவிரமடைந்துள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் பயன் அளிக்கவில்லை என்றுஐசிஎம்ஆரின் கருத்திலும் நாங்கள் உடன்படுகிறோம் என்றார்.