சிறுபான்மையினரை கும்பல் படுகொலை செய்ததற்கு எதிராக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திரகுஹா உட்பட 49 பிரபலங்கள், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். அதில், ‘‘கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. சிறுபான்மை யினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி வன்முறைகள் நடக்கின்றன’’ என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கும் நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த கடிதம் எழுதப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.