பீகாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்து, ஊழியர்களை மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில், பூட்நாத் சாலையில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, கடையிலிருந்த 3 லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில், ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.