பஞ்சாபில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் மொஹாலி நகரில் கரார்-லேண்ட்ரான் சாலையில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது. இந்நிலையில், அதன் அடிப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டும் பணி இன்று நடைபெற்று வந்துள்ளது. அப்போது கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. கட்டிடம் இடிந்த பகுதியில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தரைமட்டத்திற்கு கட்டிடம் இடிந்து போயுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர் . மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.