பீகாரில் வெறும் 12768 வாக்குகள் மட்டுமே ஆட்சியை தீர்மானித்துள்ளது தெரியவந்துள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்தஅக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்துமுடிந்தது. 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) அடங்கிய மகாகத்பந்தன் அணியும் ஜக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயககூட்டணியும் பிரதான அணிகளாக போட்டியிட்டன. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிட்டது.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 அன்று காலை தொடங்கி விடியவிடிய நடைபெற்றது. இந்நிலையில் நவம்பர் 11 அன்று வெளிவந்துள்ள து. மகாகத் பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி 23.11 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெருங்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும் ஜக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி 5 இடங்களிலும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்யூலர்) கட்சி 4 இடங்களிலும் விகாஸ்ஷில் இன்சான் கட்சி 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். ஒரு தொகுதியில் சுயேட்சை வெற்றிபெற்றுள்ளார். 10 தொகுதிகளில் ஆயிரத்திற்கு கீழ்வெற்றி - தோல்வி வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஹில்சா தொகுதியில் ஜேடியு வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராம்கார் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர், பகுஜன்சமாஜ் வேட்பாளரைவிட 189 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். பிரபத்தா தொகுதியில் ஜேடியு வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மயிதானி தொகுதியில் எல்ஜேபி வேட்பாளர், ஜேடியு வேட்பாளரைவிட 333 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு சாதகமாக தேர்தல்முடிவுகள் வந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியதற்கான பலவிதமான காரணங்கள் ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. வாக்குஎண்ணிக்கையின் இறுதி நேரத்தில் மிகப்பெரிய அளவிற்கு ஒழுங்கீனங்கள் இருந்ததைத் தெளிவான முறையில் பார்க்க முடிந்தது. இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மகாகத்பந்தன் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 0.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அதாவது 12768 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.