மதுரை, மார்ச் 9- மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மதுரை மாவட்டத்தில் சில பெற்றோர்கள் ஆண் குழந்தை வேண்டும் என்ற விருப்பத்தினா லும், வறுமை போன்ற குடும்பச் சூழ்நிலையின் காரணமாகவும், ஒன்றிற்கு மேற்பட்ட பெண் குழந் தைகள் பிறந்தால் அதை வளர்க்க விருப்பம் இல்லாமல் கள்ளிப் பால் போன்ற விஷமருந்தினை கொடுத்துக் கொலை செய்கின்ற சம்பவங்கள் நடைபெற்று வரு கின்றன. பெண் சிசுக் கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் மதுரை மாவட்ட காவல்துறை கடுமை யான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. குடும்பச் சூழ்நிலையின் காரண மாக தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத வர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டம் என்ற சிறப் பான திட்டத்தினைப் பயன்படுத்த லாம். இவை, அரசு மருத்துவமனை களில் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. எனவே பொது மக்கள் எவரும் பெண் சிசுக்கொலை குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது என்று கூறியுள்ளார். (ந.நி.)