tamilnadu

img

கைவிரிக்கிறது மத்திய அரசு

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமாம்

புதுதில்லி, மே 8- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர்  லாவ் அகர்வால் வெள்ளியன்று செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,273 பேர் கடந்த 24 மணி  நேரத்தில் குணமடைந்துள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 56,342 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1,886 பேர் உயிரிழந்துள்ள னர். குணமடைவோர் விகிதம் 29.36 சதவீதமாக உள்ளது. வெள்ளிக்கிழமை வரை 16,540  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 37,916 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.  216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.  42 மாவட்டங் களில், கடந்த 28 நாட்களில் புதிய நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. 

29 மாவட்டங்களில், கடந்த 21 நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை, 36 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் தொற்று  கண்டறியப்படவில்லை. 46 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை.  தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் திரும்புவது பற்றி நாம் பேசிக்கொண்டி ருக்கும் அதே நேரத்தில், கொரோனா வைரசுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.