tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் மாநாடு நெல்லையில் எழுச்சித் துவக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில மாநாட்டையொட்டி, திருநெல்வேலி மாவட்ட சிபிஎம் அலுவலக வளாகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மாமேதை லெனின் நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன், மாநாட்டுத் திடலில் தொழிலாளர்களின் விண்ணதிர் முழக்கங்களுக்கிடையே பெற்றுக்கொண்டார். எட்டயபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பாரதி நினைவுச் சுடரை சம்மேளன உதவி தலைவர் பி.காளியப்பன், தூத்துக்குடியிலிருந்து எடுத்து வரப்பட்ட வ.உ.சி.நினைவுச் சுடரை மற்றொரு உதவி தலைவர் வி.பிச்சையும் பெற்றுக்கொண்டனர். முன்னதாக மாநாட்டு அரங்கில் வரலாற்றுக் கண்காட்சியை ஏ.ரைமண்ட் திறந்து வைத்தார். மூத்த தோழர்கள் டி.பத்மநாபன், சுப்ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.