tamilnadu

img

திருப்பூர் அரசு மருத்துவமனை : பெண் மருத்துவருக்கு கொரோனா

திருப்பூர், ஆக.4- திருப்பூரில் அரசு தலைமை மருத்துவமனையில் பணி யாற்றும் குழந்தைகள் நல மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்  பணியாற்றிய மகப்பேறு வார்டு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய செவி லியர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர். திருப்பூர் அரசு  தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத் துவராக பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. இதைத்தொடர்ந்து, அவர் கோவையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அரசு தலைமை மருத்துவமனைக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் பணியாற்றிய மகப்பேறு வார்டு முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப் பட்டது. அங்கு பணியாற்றிய செவிலியர்கள் சிலருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவர் குடியிருந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.