சென்னை,ஆக.25 தமிழ்நாட்டில் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை காவலர்க ளுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. 9 ஆயிரம் பணியிடத்துக்கு3 லட்சம் பேர் தேர்வு எழுதி னர். இதற்காக 228 கல்லூரி களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 13 மையங்களில் 19,990 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட னர். போலீஸ் வேலையில் சேர்வதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் மட்டுமல்லாமல் பட்ட தாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் தேர்வு எழுதினர். எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வு நடைபெறும். கயிறு ஏறுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இந்த இரண்டிலும் வெற்றி பெற்ற வர்களுக்கு காவல்துறையில் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் 2 மாதத்தில் காவல்துறை இணைய தளத்தில் வெளி யிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்க ப்பட்டு பணி அமர்த்தப்படு வார்கள்.
ஆள்மாறாட்டம் 3பேர் கைது
அரியலூரில் நடைபெற்ற காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீ சார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தேர்வுமையத்தில் ரகுபதி என்பவரிடம் சந்தே கத்தின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணை யில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவ பிரகாஷ் என்பவருக்கு பதிலாக ரகுபதி தேர்வு எழுதியது கண்ட றியப்பட்டது. இதனையடுத்து தேர்வு எழுதிய ரகுபதி, எழுத சொன்ன தேவபிரகாஷ் மற்றும் அவரது அண்ணன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.