tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 9

ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயெவ்ஸ்கி நினைவு நாள்

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி  ரஷ்ய மொழி புதின எழுத்தாளரும், சிறுகதை ஆசிரியரும் கட்டுரை யாளரும், பத்திரிகையாளரும், தத்துவவாதியும் ஆவார். 19 ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனதின் ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பல்வேறு வகையான தத்துவ ஆன்மீகப் பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், அசடன், வெண்ணிற இரவுகள், துணைவர்(கள்), மரியா திமித்திரியெவ்னா இசாயெவா ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தது 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் படைத்துள்ளார். அத்துடன் நிறைய புனைவு இல்லாதவற்றையும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவர் எனக் கூறுவதும் உண்டு. இவர் 1864ல் எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலியல் படைப்புகளில் ஒன்று.

ரஷ்யப் பேரரசை விமர்சித்ததால் இவரின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. இவரின் தடை செய்யப்பட்ட புத்தகங்களை விவாதித்த இலக்கிய அமைப்பில் இருந்தமைக்காக இவர் 1849ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை கடைசி நிமிடங்களில் ரத்தானது. தண்டனை குறைக்கப்பட்டு சைபீரியச் சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பிறகு மேலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார். இதற்குப் பிந்தைய வருடங்களில் தஸ்தயேவ்ஸ்கி பத்திரிகையாளராகவும், பல்வேறு இதழ்களைத் தொகுப்பவராகவும் பதிப்பிப்பவராகவும் செயல்பட்டார். “எழுத்தாளனின் நாட்குறிப்பு” என அது வெளியாகியுள்ளது. இவருடைய நூல்கள் 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புஷ்கின், ஷேக்ஸ்பியர், கொகோல், செர்வாண்டேஸ், பிளாட்டோ போன்ற பல்வேறு ஆளுமைகளால் கவரப்பட்ட இவர் செக்கோவ், நீட்ஷே, ஹெமிங்வே, அயன் ராண்ட், பிராய்டு போன்ற வேறு ஆளுமைகளைக் கவர்ந்தவராகவும் உள்ளார். இவர் இயற்றிய “வெண்ணிற இரவுகள்” என்ற கதை “இயற்கை” என்ற தமிழ்த் திரைப்படமாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

பெரணமல்லூர் சேகரன்

;