நாகை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட சந்திரப்பாடியில் 800 மீனவ குடும்பங்கள் உள் ளன. இந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக இறங்கு தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், “பூம்புகாரில் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு வரும் துறைமுகப் பணிகள் முடிவடைந்துள்ளதால் மிக விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். தரங்கம்பாடியில் ரூ.132 கோடி செலவில் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தால் காரைக்காலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழகத்தை சேர்ந்த சந்திரப்பாடி மீனவ மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்” என்றார்.