வசிப்பிடத்திலேயே திருமணப் பதிவு...
திருமணங்கள் எந்தப் பகுதியில் நடைபெறுகிறதோ, அந்தப் பகுதியின் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். இந்த பதிவு முறையை எளிதாக்க, மணமகன் அல்லது மணமகள் தங்குமிடத்திலுள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்ட மசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
******************
பொது அறக்கட்டளை...
தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட முன் வடிவை தாக்கல் செய்த சட்டத்துறை அமைச்சர்,“சி.வி. சண்முகம், தமிழ்நாட்டில் தனியார் மற்றும் பொது என இரண்டு அறக்கட்டளைகள் உள்ளது. ஆனால், இந்த அறக்கட்டளைகளுக்கு என்று தனியாக ஒரு சட்டம் கிடையாது. இதனால் நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். வழக்குகளும் ஏராளமாக நீதிமன்றத்தில் உள்ளது.அறக்கட்டளைகளுக்கு என்று பல்வேறு மாநிலங்களில் தனியாக ஒரு சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் அறக்கட்டளைகளின் நோக்கத்தை நிறைவேற்றவும், அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும் தனியாக ஒரு சட்டம் தேவைப்படுகிறது.இதுபோன்ற ஒரு சட்டம் இல்லாததன் விளைவு ஆளவந்தார் அறக்கட்டளையின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. அதன் ஆயிரம் ஏக்கர் சொத்து விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உள்ளது.எனவே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் அறக்கட்டளையில் உறுப்பினர் களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படும்.அறக்கட்டளைகளில் குடும்ப உறுப்பினர்கள் என்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் சிக்கியவர்களும் உறுப்பினர்கள், தலைவர்களாக இருப்பதை முறைப்படுத்த முடியும். எனவேதான் புதுப்பித்தல் அவசியம் என அரசு சட்டம் கொண்டு வருகிறது என்றார்.
******************
அண்ணா பல்கலை. பிரிப்பு
ஆராய்ச்சிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலை, இரண்டு பல்கலைகளாக பிரிக்கப்பட்டு, புதிதாக அண்ணா தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலை துவக்கப்படுகிறது.இதற்கான இரண்டு சட்ட திருத்த மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்தார்.அப்போது உரையாற்றிய அமைச்சர், கடந்த, 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, அண்ணா பல்கலை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. அண்ணா பல்கலையானது, 13 உறுப்பு கல்லூரிகள், கிண்டி பொறியியல், கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இணைப்பு கல்லூரிகளுடன் செயல்படுகிறது.மாநிலம் முழுவதும் உள்ள இணைப்பு கல்லூரிகளை, சென்னையில் இருந்து நிர்வகிப்பது பல்கலையின் அதிக நேரத்தையும், ஆற்றலையும் எடுத்துக் கொள்கிறது.எனவே, இணைப்பு கல்லூரிகளை ஒன்றாக நிர்வகிக்கும் வகையில், அண்ணா பல்கலை என்றும், தற்போதுள்ள பல்கலையை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும் மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.கிண்டி பொறியியல், கல்லூரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு பள்ளி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை, இந்த பல்கலையில் அடங்கும். அந்த கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர், ஆட்சி மன்ற குழுவில் இடம் பெறுவார்.பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளில் முன்னேற்ற வழிகளை காணும் வகையில், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை உருவாக்கப்படுகிறது.புதிதாக அமைய உள்ள அண்ணா பல்கலையானது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் இணைப்புகளை கொண்டதாக இருக்கும்.அண்ணாமலை பல்கலை. உள்ள அண்ணாமலை நகரில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும், இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, “நிர்வாக வசதிக்காகத் தான் முந்தைய திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகம் ஐந்தாக பிரிக்கப்பட்டது. பின்னர் அதை இணைத்த அதிமுக மீண்டும் இரண்டாக பிரிப்பதை வரவேற்பதாகதெரிவித்தார்.
******************
அவசர சட்டங்கள்...
விவசாயிகளின் விளை பொருட்களை, இடம், நேர கட்டுப்பாடு இல்லாமல் விற்கும் வகையில், முதலீடுகளை அதிகரிக்கவும், தனியார் சந்தைகள் அமைக்கவும், தமிழக வேளாண் விளை பொருள், சந்தைப்படுத்தும் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சபை, சங்க உறுப்பினர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டால், அந்த நிர்வாக சபையை உடனே கலைத்து, இடைக்கால செயல் அலுவலரை நியமிக்கும் வகையில், தமிழக கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க் கள் தங்குவதற்காக, சென்னையில் விடுதி செயல் படுகிறது. இதில், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாக்களில் பங்கேற்கும், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், எம்.எல்.சி.க்களுக்கு வாடகையின்றி விடுதி வழங்க, சட்ட திருத்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது.அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் எடுக்க, உரிமையாளர்க ளிடம் கருத்து கேட்கும் அம்சத்தை நீக்கி, சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து துறையின் அதிகார அமைப்பில், பதவி வழி தலைவராக முதல்வர்; துணை தலைவராக வீட்டு வசதி துறை அமைச்சர். உறுப்பினர்களாக போக்குவரத்து அமைச்சர், தலைமை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி., துணை தலைவர் ஆகியோர் செயல்படும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.விரிவான வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் நடவடிக்கையில், நில உரிமையாளர் களிடம் கருத்து கேட்கும் அம்சம் நீக்கப்பட்டு, தமிழக நகர் ஊரமைப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மின்னணு முறையில் நீதிமன்றக் கட்டணங் களைச் செலுத்துவது போன்றவை அவசர சட்டங்களாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டன. இப்போது பேரவை கூடியதால், அந்த அவசர சட்டங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறும் வகையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.ஒரே நாளில் 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப் பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரே நேரத்தில்
நிறைவேற்றப்பட்டது.