tamilnadu

கொரோனா தடுப்பூசி சோதனை தளமாக எஸ்ஆர்எம் மருத்துவமனை தேர்வு

செங்கல்பட்டு, ஜூலை 4- சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தை, கோவிட்-19 தடுப்பூசி (பிபிவி 152) பரிசோதனை செய்வதற்கான தளமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நிறுவனங்களில் இந்த ஆராய்ச்சி மையமும் ஒன்றாகும். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மருத்துவ நிறுவனம் இது. இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளராக மருந்தியல் துறை, இணை பேராசிரியர் டாக்டர் சத்யஜித் மொஹாபத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.