தமிழகம் முழுவதும் ஜுன் 3 திங்களன்று பள்ளிகள் துவங்கின. திண்டுக்கல் அருகே உள்ளது துவத்தல்தோப்புப் பட்டி. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 80 பேர் படிக்கின்றனர். தற்போது 15 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் வீரபாரதி தலைமையில் ஆசிரியர்கள் ஜெயக்குமார், பரக்கத்பாட்ஷா ஆகியோர் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர்களுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.