சென்னை, நவ. 28- 5,8 ஆம் வகுப்புகளுக் கான பொதுத்தேர்வு அட்ட வணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 5ஆம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோ தாவாகவும் தாக்கல் செய்த னர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறி வித்தது. மத்திய அரசின் முடிவின் படி, தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வு கள் நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வியாழனன்று (நவ.28) வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி, 5ஆம் வகுப்புக்கான தேர்வு 2020 ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதேபோல், 8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 2020 மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: மார்ச் 30 - தமிழ், ஏப்ரல் 2 - ஆங்கிலம், ஏப்ரல் 8 - கணிதம், ஏப்ரல் 15 - அறிவியல், ஏப்ரல் 17 - சமூக அறிவியல்.8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது. இரு பொதுத்தேர்வு களும் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.15 மணிக்கு முடிவடையும் அதில், மாணவர்கள் வினாத் தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது. ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.