tamilnadu

img

மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்: ம.பி.முதல்வர் அறிவிப்பு

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி யின் 22 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேச ஆளுநர் தாண்டனை வெள்ளியன்று ஆளுநர் மாளிகையில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் கடிதம் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தின் நகலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களில் வெளியிட்டார். அதில் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொட ரின் போதுநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருப்ப தாகவும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.