tamilnadu

img

பொங்கல் விடுமுறையில் ஆட்சி மொழி ஆய்வுக்கூட்டம்: வைகோ கண்டனம்

சென்னை,ஜன.13- பொங்கல் விடுமுறையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் பொங்கல் திருநாள் என்பது  தமிழினத்தின் பண்பாட்டுப் பெருவிழா, தமிழர்களின் பண்பாடு. மரபு உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் மத்திய  பா.ஜ.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது.

பொங்கல் விழா கொண்டாடும் ஜனவரி  14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில், மத்திய  உள்துறை அமைச்சர் தலைமையிலான 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சி மொழிக்குழு தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை மற்றும்  பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு  செய்வதற்கு வர இருக்கிறது. எனவே அந்த  மூன்று நாட்களும் மத்திய அரசு அலுவல கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள் ளிட்ட அனைவரும் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படடு இருப்ப தாக செய்தி வந்துள்ளது.

தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா  பொங்கல் நாள் சிறப்பாகக் கொண்டாடப்ப டுவதை இந்துத்துவ மதவாத சனாதன சக்தி கள் விரும்பவில்லை என்பதையே இது போன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கோலம் பூணும் தமிழகத்தில்தான் இந்தி மொழியின் அலுவல் பயன்பாடு பற்றி  ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடு முறை நாட்களில் என்றால் பா.ஜ.க.  அரசின்  நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டி ருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்க ளில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு தமிழ கத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை  மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

;