ஐ.ஐ.டி.கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் அதிர்ச்சி பதில்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சென்னை, மார்ச் 6- ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்களில் பி.எச்.டி மாணவர் சேர்க்கையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவி னருக்கு உரிய இடம் வழங்கப்படாமல் வஞ்சிக் கப்பட்டு வருவதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கேள்வி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் துணைத் தலைவருமான சோமபிரசாத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் எளமரம் கரீம் இணைந்து எழுப்பியுள்ள கேள்விக்கு அரசு தந்துள்ள பதில் அதிர்ச்சியை தருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் 23 ஐ.ஐ.டிகளில் பி.எச்.டி சேர்க்கை பெற்ற 25007 மாணவர்களில் 2268 பேர் மட்டுமே எஸ்.சி பிரிவினர். 526 பேர் மட்டுமே எஸ்.டி பிரிவினர். 16 சதவீதத்திற்கும் அதிகமான பட்டியல் சாதி மக்கள் வாழும் நாட்டில் எஸ்.சி மாணவர்களின் பி.எச்.டி சேர்க்கை 9 சதவீத மாக மட்டுமே உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் ஐ.ஐ.டிகளில் எஸ்.டி மாணவர் பி.எச்.டி சேர்க்கை 2.1 சதவீதம் மட்டுமே. 23 ஐ.ஐ.டிகளில் எங்கேயுமே எஸ்.சி மக்கள் தொகைக்கு நிகரான பிரதிநிதித்துவத்தை அப்பிரிவு மாணவர்கள் பெறவில்லை என்பது வேதனைக்குரியது. 23 ஐ.ஐ.டிகளில் ஐ.ஐ.டி பிலாய் தவிர 22 ஐ.ஐ.டிகளிலும் எஸ்.டி பிரதி நிதித்துவம் தேசிய பழங்குடி மக்கள் சராசரிக்கு கீழேயே உள்ளது. 23 ஐ.ஐ.டி களில் 16 ல் எஸ்.சி மாணவர் அனுமதி சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. விடுதலை பெற்று 72 ஆண்டுகள் கழித்தும் இதுதான் நிலைமை என்பது உயர் கல்வி நிறு வனங்களில் நிலவுகின்ற சாதிய பாரபட்சத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. இதர பிற்பட்ட சாதிகளை சேர்ந்த மாண வர்களின் அனுமதியும் அப்பிரிவினரின் தேசிய மக்கள் சராசரிக்கு கீழேதான் பெரும்பா லான ஐ.ஐ.டி களில் உள்ளது. மொத்த 25007 அனுமதிகளில் ஓ. பி.சி மாணவர்கள் 5811 மட்டுமே. இது 23 சதவீதமே ஆகும்.
சென்னை ஐ.ஐ.டியும் மோசம்
ஐ.ஐ.டி சென்னையிலும் 3874 மொத்த பி.எச்.டி அனுமதிகளில் 246 இடங்கள் மட்டுமே பட்டியல் சாதி மாணவர்களுக்கும், 52 இடங்கள் மட்டுமே பழங்குடி மாணவர்களுக்கும் கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்துள்ளன. எஸ்.சி பிரதிநிதித்துவம் 6 சதவீதம் மட்டுமே. எஸ்.டி பிரதிநிதித்துவம் 1.3 சதவீதம். தேசிய சராசரி பிரதிநிதித்துவத்தை விட இது குறைவு. இது மாணவர் சேர்க்கையை மட்டும் பாதிக்கக் கூடிய ஒன்றல்ல. முனைவர் பட்ட அனுமதிகள் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்டால் எப்படி எதிர்காலத்தில் எஸ்.சி, எஸ்.டி பேராசிரியர்கள் ஐ.ஐ.டி களுக்கு கிடைப்பார்கள்? பேராசிரிய நியமனங்களில் எப்படி உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்? அதற்கும் சேர்த்து அநீதி இழைக்கப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கிற எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் எதிர்கொள்கிற சாதீய ஒடுக்குமுறைகள், இன்னல்கள் தனிக் கதை அல்ல. ரோகித் வெமுலா போன்ற பல உயிர்கள் பறிபோயுள்ளன. மாணவர் அனுமதி களிலேயே இழைக்கப்படும் அநீதிகளுக்கும் உயர் கல்வி பயிலும் ஒடுக்கப்பட்ட மாண வர்கள் எதிர்கொள்கிற இன்னல்களுக்குமான தொடர்பைப் பற்றி நிறைய விவாதங்கள் ஏற்கெனவே நடந்து வருகின்றன.
உடனடி நடவடிக்கை தேவை
உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை முறைமையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். அனுமதிகளில் மொத்தம் விண்ணப்பித்த பட்டியல் சாதி, பழங்குடி, பிற்பட்ட மாணவர்கள், எவ்வளவு பேர்; அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள்; தேர்வாளர்கள்; தேர்வை கண்கா ணிப்பவர்களில் எஸ்.சி, எஸ்.டி பிரிவை சேர்ந்த கல்வியாளர்கள்; பேராசிரியர்கள் இடம் பெறுகிறார்களா என்பவை உள்ளிட்ட தகவல்க ளை கொண்ட அறிக்கை ஒன்றை அரசு வெளி யிட வேண்டும். சம வாய்ப்பு குழுக்கள் (Equal Opportunity Cells) அல்லது எஸ்.சி, எஸ்.டி நலனுக்கான கண்காணிப்பு குழுக்கள் உயர் கல்வி நிலையங்களில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். வரும் ஆண்டு பி.எச்.டி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையாக அமலா வதை, சாதிய பாரபட்சம் களையப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரு கிறது என்று அமைப்பின் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.