சென்னை,டிச.13- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறை யில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு இருந்தது. அவரது பரோல் நிறைவடையும் நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண் டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எந்த விதமான கூட்டத்தி லும், நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப் பட்டுள்ளன.