தேனி, ஏப்.15- ஊரடங்கு உத்தரவால் பூக்க ளின் தேவை இல்லாததால் பூக்களை கால்நடைகளுக்கு உணவாக்கும் பரிதாபகரமான சூழலில் ஆண்டிபட்டி பூ விவ சாயிகள் உள்ளனர். உலகையே ஆட்டிப்படைக் கும் கொடிய நோயான கொரோ னாவை விரட்ட நாடு முழுவ தும் ஊரடங்கு உத்தரவு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர டங்கு உத்தரவால் அரிசி, காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியா வசிய பொருள்கள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், பூக்களின் தேவை இல்லாததால் நன்கு வளர்ந்துள்ள பூக்களை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைக ளுக்கு உணவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, அணைக்கரைப் பட்டி, கன்னியப்பிள்ளை பட்டி, மொட்டனூத்து, ராஜதானி, வைகை புதூர், லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு அதிகமாக பூக்கள் சாகுபடி நடைபெறுகிறது. மல்லி, கனகாம்பரம், சாமந்தி, கோழிக்கொண்டை, சம்மங்கி, சென்டுப்பூ உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் பயிரி டப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள், ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பப்படு கின்றன. தற்போது கரோனா பீதி யால் ஊரடங்கு பிறபிக்கப்பட்ட தால் பூக்கள் சாகுபடி நலி வடைந்து வீழ்ச்சி அடைந்துள் ளது.
பூக்கள் விதையாக நடவு செய்து, மருந்து அடித்தல், உரமிடு தல், களை எடுத்தல் ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.50 ஆயி ரம் வரை செலவாகின்றன. இந்த வகையான சென்டுப் பூக்கள் மாலை கட்டுவதற்குதான் அதி கம் பயன்படுத்து வார்கள். தற்போது கோயில் திருவிழாக் காலம் என்பதால் விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்துள்ளனர். இரண்டு மாத பராமரிப் பிற்கு பிறகு பூக்கள் பூத்து முதல் எடுப்பிற்கு தயாராகி உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் தடைபட்டு, கோயில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பூக்க ளின் தேவை இல்லாமல் போய்விட்டது. நன்கு வளர்ந்து பூத்துக்குலுங்கு கின்ற பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டனர். தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் ஆடு, மாடு களுக்கு பூக்களை உணவாக்கி வருகின்றனர். எனவே பூ விவசாயி களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.