tamilnadu

img

ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்து விபத்து

தருமபுரி, செப்.11- ஒகேனக்கல் காவிரி ஆற்  றில் தடையை மீறி இயக்கப்  பட்ட பரிசல் கவிழ்ந்ததில், பிரான்ஸ் நாட்டில் வசித்து  வந்த புதுச்சேரியை சேர்ந்த  பெண் அடித்து செல்லப் பட்டார். வெள்ளப்பெருக்கு கார ணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரி சல் இயக்கவும் மாவட்ட நிர் வாகம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வரும் புதுச்சேரியை சேர்ந்த மனோ தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோசிகா ஆகியோருடன் ஒகேனக்கலுக்கு வந்துள் ளார். அங்கு பரிசலில் பய ணித்துள்ளனர்.  ஒகேனக்க லில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முசல் மருவு என்ற இடத்திலிருந்து சென்றுள்ளனர். வெள்ளப் பெருக்கினால் அவர்கள் நீல கிரி தோப்பு பகுதியில் சென்று  கொண்டிருந்த போது, பரி சல் கவிழ்ந்து விபத்துக் குள்ளாகியுள்ளது. இதில் பரிசலில் இருந்த  அனைவரும் நீரில் விழுந்த னர். அவர்களுள் 51 வயதான அஞ்சலாட்சி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மனோ மற்றும்  அவரது மகள், பரிசல் ஓட்டி  மனோகரன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து தப்  பித்துள்ளனர். மனோ மற்றும் அவரது மகள் ஆகியோரை  பரிசல் ஓட்டி மனோகரன் மீட்டு  கரை சேர்த்தார். தடையை மீறி  ஓகேனக்கலில் பரிசல் இயக்கிய மனோகரன் கைது  செய்யப்பட்டுள்ளார்.