tamilnadu

img

வெறிச்சோடி கிடக்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள்

சென்னை, ஏப்.12- பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்த போதிலும், ஊரடங்கு காரணமாக மக்கள்  வராததால் அவை வெறிச்சோடிகிடந்தன. தமிழகம் முழுவதும் 578 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டில் பத்திரப் பதிவு, ஆவணப் பதிவுகள் வாயிலாக 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், மார்ச்  மாதம் 25 ஆம் தேதி முதல் பத்திரப்பதிவுத்  துறை அலுவலகங்கள் மூடப்பட்டன. இத னால் பத்திரப்பதிவு துறைக்கு 600 கோடி  ரூபாய் வரை வருவாய் இழப்பை சந்தித்து  உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 20 ஆம் தேதி முதல்  அரசு அலுவலகங்களில் 33 விழுக்காடு ஊழியர்களோடு செயல்பட அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் தமிழ கம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலு வலகங்கள் திங்களன்று (ஏப்.20) செயல் பட தொடங்கியது. இருப்பினும், ஆவ ணப்பதிவுக்கு மக்கள் வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன இந்தநிலையில், ஊரடங்கு கட்டுப்பாடு கள் தொடரும் என்று மாநில அரசு அறி வித்து விட்டது.