கோவை,டிச.10- கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் - குன்னூர் இடையே யான மலை ரயில் சேவை ஒரு வாரத்திற்கு பிறகு செவ்வாயன்று மீண்டும் துவங்கியது. கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் கடந்த ஒருவாரமாக ரயில் போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று, புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு செவ்வாயன்று காலை 7.15 மணியளவில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.