tamilnadu

img

மருதநாயகம் எனும் முகமது யூசுப்கான்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற எண்ணற்ற போர் வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் மருதநாயகம். மருதநாயகம்  என்றழைக்கப்பட்ட முகமது யூசுப்கான் ஆர்க்காட்டுப் படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்தியப் படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார். அக்காலத்தில் பனையூரில் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின. அவற்றுள் மருதநாயகம் குடும்பமும் ஒன்று. மருதநாயகம் என்ற தனது பெயரை முகமது யூசுப்கான் என்று மாற்றிக்கொண்டார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தைப் போரில் ஈடுபடச் செய்தனர். பிற்காலங்களில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவடையும் காலகட்டத்தில் மதுரையை ஆளும் அதிகாரத்தை ஆங்கிலேயர் இவருக்கு அளித்தனர். தம் வாழ்நாளின் இறுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். அக்டோபர் 15, 1764 ஆம் ஆண்டில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிப்பட்டார் முகமது யூசுப் கான் எனும் மருதநாயகம். 

===அக். 15 (இன்று) மருதநாயகம் நினைவு நாள்===