tamilnadu

img

மருத்துவச் சுற்றுலா: அமைச்சர் தகவல்

சென்னை, செப்.20- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சுற்றுலா மற்றும் மருத்துவக் கண்காட்சியை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி யில் சுற்றுலா சார்பில் 150 அரங்குகளும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் 40 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்  காட்சியை பார்வையிட்ட பின் செய்தி யாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறையை சேர, சோழ, பாண்டியா  உள்ளிட்ட 4 மண்டலங்களாக பிரித்து அரசு  சார்பில் மருத்துவச் சுற்றுலா அழைத்து  செல்வதற்கான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் நீட்  நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் நடத்துகிறது. ஆள்மாறாட்டம் குறித்து தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் கூறினார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு இமெயில் வந்த தாகவும் அதன் அடிப்படையில் சம்மந்தப் பட்ட மாணவனிடம் விசாரணை நடத் தப்பட்டதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.