"அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. வருவதை ஏற்றுக் கொள்வோம் என நினைத்தேன்," என்கிறார் லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே வசிக்கும் மதுரை வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜீஸ்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் 135 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.துறைமுகத்தின் அருகே இருந்த கிடங்கில் இருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜீஸ் வெடிப்பு நடந்த துறைமுகத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.இவர் வெடிப்பு நடந்த துறைமுகத்தில்தான் அருகில் 1.5 கி.மீ தூரத்தில் தான் வசிக்கிறார்.
எப்போதும் மாலையில் கடைக்கு செல்பவர் விபத்து நடந்த செவ்வாய் கிழமை ,கடைக்கு செல்லும் நேரத்தில் குளித்து கொண்டிருந்ததாகவும்,கடைக்கு சென்றிருந்தால் கண்டிப்பாக உயிரிழந்திருப்பேன் எனவும் அவர் கூறுகிறார்.இந்த வெடிவிபத்தால் தாம் பணியாற்றும் அலுவலகம் முழுவதும் சேதமடைந்ததாகவும் ,இதன் பாதிப்பு 15 கி.மீ வரை இருக்கும் எனவும் அஜீஸ் கூறுகிறார்.