சென்னை, ஏப்.9- நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள், தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ள அறி வுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில், நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்க ளுக்கு, நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்து, வங்கி கணக்கு அளிக்காத உறுப்பினர்கள், பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை உள்ளிட்ட விபரங்களை, loossche@gmail.com என்ற இ-மெயில் அல்லது 73052 80011 என்ற, ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் அனுப்பலாம். வங்கி கணக்கு விபரங்களை அளித்துள்ள உறுப்பினர்கள், மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என, சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சாந்தி தெரிவித்துள்ளார்.