tamilnadu

img

கோவையில் பிஐஎஸ் அதிகாரிகள் ஆய்வு

கோவை, ஆக.24- கோவையில் போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்தி பம்பு செட்டு களை விற்பனை செய்த நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) அதிகாரிகள் சனியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  கோவை சரவணம்பட்டி அருகே செயல்பட்டு வரும் நிறுவனங்களில் முறையான உரிமம் இன்றி போலியாக ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் பி.ஐ.எஸ்  முத்திரைகளை பயன்படுத்தி பம்பு செட்டுகள் தயாரிப்பதாக பி.ஐ.எஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பிஐஎஸ் அதிகாரி மீனாட்சி கணேசன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று அதிரடி ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது உரிமம்பெறாமல் முத்திரையை பயன்படுத்தி பம்பு செட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இவ்வாறு உரிமம் இன்றி பி.ஐ.எஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ முத்திரைகளை பயன்படுத்தினால் 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.