tamilnadu

img

போலி இணையதளம் அதிமுக முன்னாள் எம்.பி. கைது

கோவை,ஜன.25- அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்த தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி யை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த முன் னாள் நாடாளுமன்ற உறுப்பின ரும், அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டவருமான கே.சி. பழனிசாமி, www.admk.org.in என்ற பெய ரில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகி யோரின் உருவ படத்துடன் இரட்டை சிலை சின்னத்துடன் போலி இணையதளம் நடத்தி வரு வதாக சூலூர் காவல்நிலையத் தில் முத்துகவுண்டன் புதூர் ஊரா ட்சி மன்ற தலைவர் கந்தவேல் புகார் அளித்தார். இந்த புகா ரின்பேரில் சனிக்கிழமையன்று அதிகாலையில் கோவையிலுள்ள கே.சி. பழனிசாமி வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இவர் மீது 10 பிரிவு களின் கீழும், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;