நரேந்திர தபோல்கர்,மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி தொ டர்ந்து நடத்தியவர். மக்களை முட்டாள் களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொ டர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல் கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். சமூகத்தை அறிவியல் மனப்பான் மையுடன் வளர்ப்பதில் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதி ராக பேசுவது அப்படி ஒன்றும் எளி தல்ல. தபோல்கர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் மன்றத்தில் சாமியார்களை, மோசடி களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.
மராட்டிய மாநில அரசு, மூடநம்பிக் கைகள் மற்றும் போலி சாமியார்களுக் கெதிராக ஒரு சட்டத்தை இயற்றி யுள்ளது. அத்தகைய சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு நெருக்க டியை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை இவர் தொடர்ந்து நடத்தி வந்தார். சாதனா என்ற முற் போக்கு பத்திரிகையையும் நடத்தி வந்தார். தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாச மாக்குவது மற்றும் தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன்பாட் டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங்களை முன்னெடுத்திருக்கிறார்.
அத்துடன் நாசிக் போன்ற பகுதி களில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புக ளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொ டர்ந்து போராடி வந்தார். அந்த வகை யில் சாதி வெறியர்களின் கோபத்துக் கும் தொடர்ந்து ஆளாகி வந்தார். பரி வர்த்தன் என்ற பெயரில் போதை அடி மைகளை மீட்டு எடுக்கும் மையம் ஒன்றை தனது சொந்த ஊரான சதாரா வில் நடத்தி வந்தார். சதாரா நகரின் மக்கள் மத்தியில் தபோல்கருக்கு நல்ல மரியாதை இருக்கிறது. புனே நகரில் மருத்துவர் நரேந்திர தபோல்கரின் வழக்கமான நடை பயணத்தின் போது காவி கூட் டங்களால் படுகொலை செய்யப் பட்டார். அதையொட்டி மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். அவரது வீட்டுக்கு வந்த மக்கள் மிகுந்த கோபத்துடன் ஆங்காங்கு சேர்ந்து மௌன ஊர்வ லம் சென்றனர். அறுபது வயதை தாண்டிய பிறகும் ஓய்வெடுக்காது. சமூகத்தின் நல்வாழ்விற்காக, சமூ கத்தின் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த தபோல்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான நினை வஞ்சலி என்பது, அவர் போராடிய பாதை யில் தொடர்ந்து போராடுவதிலும், அதில் குறிப்பிடத்தக்க அளவில்வெற்றி பெறுவதிலும் தான் இருக்கிறது. இதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையை யும், மகிழ்ச்சியையும் பெற முடியும்
-பெரணமல்லூர் சேகரன்