tamilnadu

டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதி ஒதுக்கீடு செய்த பள்ளிக்கட்டிடப் பணியை பாதியில் நிறுத்தாதே

உதகை, ஜுலை 29 – கொரோனா காலத்தைக் காரணம்காட்டி பள்ளிக்கட்டிடப் பணிகளை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கர லிங்கம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி யுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகில் மின் வாரிய அலுவலகம் முன்பு உள்ள அரசு  துவக்கப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்ற னர். மேலும், சுமார் 25 மாற்றுத்திறனாளி குழந்தைகளும் படித்து வருகின்றனர். முன்ன தாக, அப்பள்ளிக் கட்டிடத்தின் இடநெருக்க டியை சரிசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பி னர் டி.கே.ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் இங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு கொரோ னாவைக் காரணம் காட்டி அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு  நிதியையும் நிறுத்தியது. ஆனால், இப்பள் ளிக் கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியா னது கொரோனாவிற்கு முன்பே ஒதுக்கப்பட் டதாகும். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப் பட்டுள்ளதால் பள்ளியின் கட்டிடப் பணிகள் பாதியிலேயே நின்று போனது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா வன்மையாக கண்டிப்பதுடன்,  மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பாதியில் நிற்கும் பள்ளியின் கட்டிடத்தை உடனடியாகக் கட்டி முடிக்கவும், பள்ளி திறக்கும் போது  புதிய கட்டிடத்தில் குழந்தைகள் படிக்க வும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது.