tamilnadu

img

போலி அறிவியலைப் பரப்புவது  சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது

திருப்பூர், ஆக.10- சமூகத்தில் போலி அறிவியலைப் பரப்புவது பெரும் பாதிப்பை ஏற் படுத்துகிறது. இதற்கு எதிராக அறி வியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் விஞ்ஞானி த.வி.வெங்க டேஸ்வரன் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் 20ஆவது மாநில மாநாடு “மாற்றத்துக்கான அறிவியல்” என்ற கொள்கை முழக்கத்துடன் திருப்பூர் அம்மன் கலையரங்கில் வெள்ளி யன்று தொடங்கியது. இம்மாநாட் டிற்கு முன்னதாக சிறுபூலுவபட்டி வேல் நர்சரி பள்ளி அருகில் இருந்து “மார்ச் ஃபார் சைன்ஸ்” எனும் அறி வியலுக்கான பேரணி தொடங்கியது. இப்பேரணியை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத் தார். அங்கிருந்து மாநாடு நடைபெறும் ஸ்ரீ அம்மன் கலையரங்கத்தில் இப் பேரணி நிறைவடைந்தது.  இதையடுத்து மாநாட்டு அரங் கத்தில் த.வி.வெங்கடேஸ்வரன் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, அறிவியல் மனப் பான்மை வளர்வதற்கு எதிரான சூழ் நிலை நிலவுவது மற்றும் போலி அறி வியலைப் பரப்புவது ஆகிய மூன்றும் மிகப்பெரும் சவாலாக உள்ளன. இந்த சூழ்நிலையில் மாற்றத்துக் கான அறிவியல் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுவது முக்கி யத்துவம் பெறுகிறது. இம்மாநாட் டில் இந்த அடிப்படை விசயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக சேலம் பெரியார் பல்க லைக்கழக துணைவேந்தர் முனைவர் பி.குழந்தைவேலு 20 ஆவது மாநில மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். அப்போது பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகள் படைப்பார்கள் என்பதில்லை, படிக்காதவர்கள் கூட ஆராய்ச்சி மனப் பான்மையுடன் பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். கோவை ஜி.டி.நாயுடு ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகளைப் படைத்துள்ளார். இன்றைய சூழலில் நிலம், காற்று மாசுபட்டுள்ளது. பருவ மழை கூட காலம் தவறிப் பெய்கி றது. இதில் மாற்றத்துக்கான வழி யைக் கண்டறிய வேண்டும் என்றார்.

பொது மாநாட்டுக்கு வர வேற்புக்குழுத் தலைவர் யுனிவர்சல் எஸ்.ராஜகோபாலன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செய லாளர் ஆ.ஈசுவரன் வரவேற்றார். இம்மாநாட்டில் விஞ்ஞானிகள், அறி வியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் திரளா கக் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதாசிவம் உல கம் எப்போது அழியும் எனும் தலைப் பில் கருத்துரையாற்றினார். சனி யன்று காலை பிரதிநிதிகள் மாநாடு தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி இம்மாநாடு நிறைவு பெறு கிறது.