tamilnadu

img

பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு

 சென்னை,பிப்.12- பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்வு, முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் மே மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசாணை வெளியிட்டது.

அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப்பதிவு புதனன்று(பிப்.12) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பித்திருந்தால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

;