tamilnadu

img

இடர்படி கோரி தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை, ஏப். 27 -  கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு இடர்படி வழங்கி வருகின்றது. இதேபோல் தங்களுக்கும் இடர்படி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி தூய்மைப் பணியாளர்கள் திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

;