கே.பாலகிருஷ்ணன் சாடல்
புதுச்சேரி, செப். 26- புதுவையில் ஆளுநரைக் கொண்டு பாஜக ஆட்சி நடத்து கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சாடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் ‘மாநில உரிமைகளும் மக்கள் விரோத மசோதாக்களும்’ எனும் தலைப்பில் புதனன்று (செப்.25) புதுச்சேரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், “கடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதும் இனி இடதுசாரிகள் தலை தூக்க முடியாது என ஊட கங்கள் எழுதின. ஆனால் பாஜக-வின் 100 நாள் அலங்கோல ஆட்சியில் இடதுசாரிகள் இல்லையென்றால் இந்தியா இருக்காது என்ற நிலை உருவாகி உள்ளது” என்றார்.
“இந்திய பொருளாதார நெருக்கடி உலகப் பொருளாதார நெருக்கடி யோடு தொடர்புடையது. பொருளா தார நெருக்கடி காரணமாக தமிழ கத்தில் சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், ஒசூர் உள்ளிட்ட இடங்க ளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பொதுத்துறையான ரயில்வேயில் தனியாரை அனுமதித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் தனியார் ரயிலை இயக்க உள்ளனர். அடுத்த 5 ஆண்டு களில் இந்தியா என்ற நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. இப்படிப்பட்ட மோடியுடன் அதிமுக கூட்டு சேர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கிறது” என்றும் அவர் கூறினார். “ஆட்சி அதிகாரத்தை பயன்ப டுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் பாஜக பல்வேறு தொந்தரவு களை செய்கிறது. அதற்கு உதாரண மாக, தில்லியில் தோற்ற கிரண் பேடியை ஆளுநராக்கி புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் மக்களை அவ மதிக்கிறது. பாஜகவுக்கு பாடம் புகட்ட ஒன்றிணைந்து போராடுவோம்” என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
தேசத்தை சூறையாடும் சித்தப்பா
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசுகையில், “ரேஷனில் அரிசி வழங்குவதாக கூறிய தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறை வேற்றவில்லை என்று புதுவை முதல்வ ரிடம் கேட்டேன். ஆளுநரின் உத்தரவு படி 30 கிலோ அரிசிக்கு பதிலாக 300 ரூபாய் பணமாக தருகிறோம். அரிசி யாக தர வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று அவர் கூறினார். தேர்ந் தெடுக்கப்பட்ட அரசு புதுச்சேரியில் இருந்தாலும் குறுக்கு வழியில் பாஜக ஆட்சி செய்கிறது” என்றார். “யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்கு சிறிது அதிகாரம் உள்ளது. அதை பயன்படுத்தி பாஜக அரசின் திட்டங்களை கிரண்பேடி புது வையில் செயல்படுத்துகிறார். பொது விநியோக முறையை கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படு கிறார். பிரதேச அரசின் பரிந்துரை களை மத்திய உள்துறை அமைச்ச கத்திற்கு அனுப்பி கிடப்பில் போடப் படுகிறது” என்று குறிப்பிட்ட அவர், “மாநில உரிமைகள் பறிப்பு என்பது அரசியல் சட்டப் பிரச்சனை. அரசு உயரதிகாரிகள் ஷா கமிஷன் அறிக்கைப்படி நடக்க வேண்டும்” என்றார்.
“இந்தியாவின் தந்தை மோடி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறு கிறார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்காக நின்ற காந்தியை தேசப்பிதா என்கிறோம். அதைப் போல மோடியை கூற முடியுமா? மாறாக, இந்தியாவை சூறையாடும் சித்தப்பா என்று வேண்டுமானால் அழைக்க லாம்” என்று எள்ளல் செய்தார்.
இந்து பெண்களுக்கும் எதிரானது பாஜக
மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் குறிப்பிடுகையில், “இந்திய பெண்களுக்கு ரத்த சோகை அதிகம் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்துக்களுக்கு பாடுபடும் கட்சி என்று கூறிக்கொள் ளும் பாஜக தலைவரால் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளார். வீடியோ ஆதாரம் இருந்தும் ஆட்சியாளர்கள் அவரை பாதுகாக்கின்றனர். பாஜக இந்துக்கள், இந்து பெண்கள் அனை வருக்கும் எதிரான கட்சி” என்றார்.
303 ஐ 3 வெல்லும்
“நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு மசோதா விவாதத்திற்கு கொண்டு வருவதற்கு 7 நாட்களுக்கு முன்பே உறுப்பி னர்களுக்கு தர வேண்டும். ஆனால் பாஜக ஆட்சி ஒரு மணி நேரம் கூட அவகாசம் தராமல் அவசரகதியில் 32 மசோதாக்களை நிறைவேற்றியது. பாஜக தனது அதிகாரத்தை பயன் படுத்தி அரசியல் கட்டமைப்பை தகர்க்கிறது” என்று மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. சாடினார்.
“37 நாட்கள் நடந்த மக்களவை யில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை, எதிர்ப்புகளை தெரி வித்தபோதும், ஒரு நிமிடம் கூட அவை ஒத்தி வைக்கப்படவில்லை. நாடாளு மன்ற உறுப்பினர்களின் கருத்துகளும், உரிமைகளும் மதிக்கப்படவில்லை. மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் உரிமை மத்திய அரசு தருவதல்ல; அரசியலமைப்புச் சட்டம் கொடுப்பது என்றார் அம்பேத்கர். இதன்படி தனித்த அடையாளத்தை இழப்பதை இந்திய மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த மண்ணை பாசி சத்திற்கு எளிதாக பலி கொடுக்க மக்கள் விடமாட்டார்கள். 303 என்ற எண் ணிக்கை கொண்ட பாஜகவை 3 எண் ணிக்கை கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி நிச்சயம் வெல்லும்” என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக தோற்கடிக்கப்பட்டது. அதுபோலவே தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுகவை மக்கள் தோற்கடிப்பார்கள்.
- கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து..