tamilnadu

பத்திரிகையாளர்கள்  மீது காவல்துறையினர் தாக்குதல்

பாட்னா:
பாட்னாவில் உள்ள விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்த முயன்று தள்ளிவிட்டனர்.தேச விரோத வழக்கில் தேடப்பட்டு வந்த தில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் ஷார்ஜீல் இமாம் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். இவரை, தில்லிக்கு கொண்டு செல்ல ஜெகனாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அவரை விமானம் மூலம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்த செய்தி சேகரிப்பதற்காக, பாட்னா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்த காவல்துறையினர், அவர்களை தள்ளிவிட்டனர். இதில், ஏ.என்.ஐ. ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

;