tamilnadu

img

பிஎஸ்என்எல் நிறுவனம் மூழ்கும் கப்பல் அல்ல!

தொலைத் தொடர்பு இலாகாவுக்கு கடந்த ஜூன் 17அன்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத் தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள தென்றும் தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப்பட வில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட சேவைகளைத் தொடர்வதற்குமே கூட சிரமம் ஏற்படும் என்றும் கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும், தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகளை சில சுயநல சக்திகள் வெளியிட்டு வரு கின்றன.  பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவிற்கு அவர்கள் விஷமச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

பிரச்சனை என்ன?
தற்போது பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல; அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப் படுத்தி வரும் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் குரல்வளை யையும் நிதி நெருக்கடி என்பது நெரித்துக் கொண்டி ருக்கிறது. செப்டம்பர் 2016- இல் சேவைகளைத் துவக்கிய காலம் முதல் அடக்க விலைக்கும் குறைவாகவே ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பொருளாதார பலத்தை வைத்துக் கொண்டு, போட்டியாளர்களை எல்லாம் வெளியேற்றுவ தற்காக இத்தகைய விலை குறைப்பை செய்து வருகிறது. அரசாங்கமும், டிராய் அமைப்பும் ஜியோ நிறுவனத்துக்கு நேரடி மற்றும் மறைமுக உதவிகளைச் செய்து வரு கின்றன. அதன் விளைவாக, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் தலை கீழாக அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ தொடுத்த கொடூரமான கட்டண யுத்தம் காரணமாக, ஏற்கனவே ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோ காம், டெலினார் உள்ளிட்ட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

பிஎஸ்என்எல் நிறுவனம் திறனற்றதா?
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செயல் திறன் குறித்துப் பேசுவோர், ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. இன்றிருப்ப தைக் காட்டிலும் ஒரு லட்சம் ஊழியர்கள் கூடுதலாக இருந்த காலத்தில், இதே பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2004-05 ஆம் ஆண்டில் நிகர லாபமாக 10,000 கோடி ரூபாயை ஈட்டியது. ஆனால் அதன் பின்னர், 7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு, தனது கட்டமைப்புகளை விரிவாக்குவதற்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதற்காக வெளியிட்டு, இறுதி செய்யப்பட விருந்த டெண்டர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப்பட்டன. இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது. மேலே சொல்லப்பட்ட நெருக்குதலுக்குப் பிறகும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. 2014-15 நிதியாண்டு முதற்கொண்டு, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைத் தொடர்ந்து ஈட்டி வந்தது. 2015- ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது கூட, பிரதமர் நரேந்திர மோடி நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டத் துவங்கியுள்ளதைப் பெருமையோடு குறிப்பிட்டார்.  இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு இடையிலேயும், பி.எஸ்.என்.எல். நிறுவனம், தனது மொபைல் வாடிக்கை யாளர் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. உதாரணமாக, 2017-18- ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் 11.5 % அதிகரித்தனர். ஆனால் இதே ஆண்டில் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் 9.5 %, வோடஃபோன் 3.8%, ஐடியா நிறுவனம் 3.2% என்ற அளவில் மட்டுமே அதிகரித்தன. 2019 ஏப்ரல் மாதத்தில் கூட, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2,32,487 புதிய மொபைல் வாடிக்கையாளர்களை அதிக ரித்துள்ளது. ஆனால் ஏர்டெல் 29,52,209 மொபைல் வாடிக்கையாளர்களையும் வோடஃபோன் 15,82,142 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.  நிதி நிலை குறித்துப் பேசினாலும் கூட, தனியார் நிறுவ னங்களோடு ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் நிலை அந்த அளவு மோசமல்ல. இன்றைய தேதி யில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் 13,000 கோடி ரூபாய்கள் மட்டுமே. ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவ னம் ரூ. 1,18,000 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.1,08,000 கோடியும் கடன் வைத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறு வனம் கூட 1,12,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது.

மிகப்பெரும் சொத்து
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி அடித்தளம் போதுமான வலிமை கொண்டதாகவே உள்ளது. 7.5 லட்சம் வழித்தட கிலோ மீட்டர் அளவு கண்ணாடி இழை வலைக் கட்டமைப்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 6.25 லட்சம் கிலோ மீட்டரும், ஏர்டெல் நிறுவனத்திடம் 2.5 லட்சம் கிலோ மீட்டரும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் 1.6 லட்சம் கிலோ மீட்டரும் மட்டுமே உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நாடு முழுவதும் ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. வேறு எந்த நிறுவனத்திடமும் இவ்வளவு பெரிய சொத்துக்கள் இல்லை. மேற்சொன்ன இத்தனை வலிமைகள் இருந்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான பணப்புழக்க குறை பாட்டை சந்தித்து வருகிறது. தொலைத்தொடர்புத் துறைக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் இதற்கு காரணம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 100% பங்குகளும் இந்திய அரசுக்குச் சொந்தமானது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன தேவை களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பதினெட்டரை ஆண்டுக் காலத்தில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூட நிதி உதவியாக பி.எஸ். என்.எல். நிறுவனம் அரசிடம் இருந்து பெறவில்லை என்று கூறுவது உண்மைதானே தவிர மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அரசு மேற்கொள்ளும்போது அதற்குக் கை கொடுப்பது பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே. இந்த சமயங்களில் எல்லாம், தங்கள் பொறுப்புகளி லிருந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தப்பி ஓடி விடுகின்றன. அது மட்டுமன்றி, பின் தங்கிய மற்றும் தொலை தூரப் பகுதிகளில் வாழும் மக்கள் மங்கள் தொலைத்தொடர்புத் தேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் மத்தியில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்துள்ளன. இன்றும் இதே நிலைமை தொடர்கிறது. உதாரணமாக, மொபைல் சேவை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்க ளுக்கு 1995- ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். -க்கு, 2002- ஆம் ஆண்டில்தான் மொபைல் சேவை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4 ஜி சேவையினை வழங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை பி.எஸ்.எம்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கவில்லை. இவ்வாறாகத்தான் அரசின் கொள்கை முடிவுகள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளன. 2000- ஆம் ஆண்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரு வாக்கப்பட்டபோது, அதன் நிதி ஸ்திரத் தன்மை பாது காக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை உறுதி அளித்தி ருந்தது. ஆனால், இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டுமே உள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் உண்மையான கட்டுப்பாட்டாளராக பி.எஸ்.என்.எல். மட்டுமே உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தையில் இருப்பதால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை தன்னிச் சையாக உயர்த்தி வாடிக்கையாளர்களை கொள்ளை யடிக்க முடியவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப் பட்டால், தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்கு தடையின்றி சுரண்டுவதற்கான சூழ்நிலை ஏற்படும். எனவே, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலன்களை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல் எனும் மாபெரும் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.

;