tamilnadu

img

நீதியின் கூட்டணி - அபூர்வா விஸ்வநாத்

உறுதியானவர், நியாயமானவர், ஊசலாட்ட மில்லாதவர், அடிப்படையிலேயே நேர்மை யானவர். அவர் நீதிபதியாக இருந்த 14 வருடங்கள், அதற்கு முன்பு நீண்ட காலம் அவர் வழக்கறி ஞராக பணியாற்றிய காலம் ஆகியவற்றை பற்றி ஒரு மனதாக அனைவராலும் தெரிவிக்கப்படும் கருத்துகளே முதல் வரியில் உள்ளன.   கடந்த வாரம் தில்லிக் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய தில்லி காவல்துறையை வறுத்தெடுத்து, அதன்பின் சில மணி நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதியைப் பற்றியே அந்த கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

வியாழக்கிழமை காலை தில்லி உயர்நீதிமன்றத்தின் 38ஆம் எண்ணுள்ள அறையில் நீண்ட வரிசை காத்துக் கிடக்கிறது. வழக்கறிஞர்கள் பரபரப்பாக இருந்த போதும், நீதிபதி அவருக்கே உரித்தான புன்னகையுடன் தெளிவாக உள்ளே நடந்து வந்தார். அவருக்கு முன்பிருந்த வழக்கு பி.வி.கபூர் எதிர் ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி. குடியிருப்பு இடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு அது. அந்த வழக்கில் குடியிருப்போர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய 58 வயதான நீதிபதி, “இதுவே தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக எனது கடைசி நீதித்துறை பணி” என்று தெரிவித்தார். 

நீதிபதி முரளிதர் பற்றி தெரிந்தவர்கள் சொல்வ தெல்லாம், இது அவரின் பாணி என்றும், அவர் நீதிபதியாக இருந்த 14 வருடத்திலும், அதற்கு முன்பு வழக்கறிஞராக இருந்த போதும், அவரின் பணிகளே அவரின் வார்த்தை களை விட உரத்துப் பேசும் என தெரிவித்தனர்.  கடந்த வாரம் தில்லிக் கலவரங்களால் சூழப்பட்ட போது,  அவரது செயல்களும் அவரது வார்த்தைகளும் தனித்து நின்றன – குறிப்பாக (நிர்வாகத்தின்) ஒவ்வொரு அங்கமும், துறைகளும் தங்களின் பொறுப்புகளை கைவிட்ட சூழ்நிலையில். செவ்வாய் இரவு-புதன் அதிகாலை 12.30 மணிக்கு அவரின் வீட்டில், அவருக்கு வந்த பீதியுற்ற அழைப்பை ஏற்று, புதிய மூஷிதாபாத்தில் கலவரத்தில் காயமடைந்தவர்களை ஒரு மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல முடியாத நிலையில் தலையிட்டு அவர்களை பாதுகாப்போடு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்தார். 

அடுத்த நாள், நிலைமையை கணக்கில் கொள்ள நடைபெற்ற விசாரணையில், நீதிபதி முரளிதர் தில்லி காவல்துறையை கடுமையாக விமர்சித்து, துவேஷத்தை தூண்டும் பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று வினா எழுப்பினார். காவல் அதிகாரிகளும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் தாங்கள் அதனை கேட்கவில்லை என்று தெரிவிக்க, நீதிபதி அந்த வெறுப்பு பேச்சுகளை திறந்த நீதிமன்றத்திலேயே போட்டு கேட்க வைத்தார். அந்த நாள் முடிவதற்கு முன்பே மற்றொரு நிகழ்வும் நடை பெற்றது. அரசாங்கம், நீதிபதி முரளிதர் அவர்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்திற்கு இடமாறுத லுக்கு ஒப்புதல் அளித்தது. இது எதிர்க்கட்சிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகியது. தில்லி உயர்நீதிமன்றத் தின் 3ஆவது மூத்த நீதிபதி இனி பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் 2ஆவது மூத்த நீதிபதி. உச்சநீதிமன்றத் தின் கொலீஜியம் இந்த இடமாறுதலுக்கு எவ்வித காரணங்க ளையும் தெரிவிக்காமல் முடிவு செய்ததிலிருந்தே, தில்லி உயர்நீதிமன்றத்தின் பார் அசோஷியேசன்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது.   

அவர் நீதிபதியாக பணியாற்றிய 14 ஆண்டுகள், அதற்கு முன் வழக்கறிஞராக பாரில் பணியாற்றிய போது அவரைப் பற்றி அவரைப் போன்று பணியாற்றும் பல்வேறு தரப்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் தெரி வித்ததுதான் - உறுதியானவர், நியாயமானவர், ஊச லாட்டமில்லாதவர் என்பதே. கம்பெனி செகரட்டரியாக தொடங்கிய நீதிபதி முரளிதர் 1984ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து, மூன்றாண்டுகள் கழித்து சென்னையிலிருந்து தனது வழக்கறிஞர் பணியை தில்லிக்கு மாற்றினார். அங்கு அவர் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஜி.இராமசாமியிடம் ஜூனியராக பணியாற்றினார். இராமசாமி பின்பு இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலானார். இராமசாமியிடம் வேலை பார்த்த போதுதான், சாஸ்த்ரீய சங்கீதத்தில் நல்ல ஆர்வம் கொண்ட அவர், சட்டம் குறித்த ஆராய்ச்சி மாணவி உஷா ராமநாதனை சந்தித்தார், அவரே பின்னர் முரளிதரின் மனைவியானார். 

ஒரு வழக்கறிஞராக அவர் பெரும்பாலும் மக்கள் உரிமைகளுக்கான வழக்குகளையே நடத்தினார். நர்மதை பாதுகாப்பு வழக்கு, போபால் விஷவாயுவால் பாதிக்கப் பட்டவர்கள் வழக்கு போன்றவைகளையே நடத்தினார்.  1991ல் டி.என்.சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது, அவர் தேர்தல் கமிஷனின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சேஷனின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய அரசு மேலும் இரண்டு தேர்தல் கமிஷனர்களை நியமித்தது. சேஷன் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார், அவர் தனது வழக்கறிஞராக முரளிதரை நிய மித்தார். முரளிதர், முதலில் தேர்தல் கமிஷனின் வழக்கறி ஞர் என்ற தனது பதவியை ராஜினாமா செய்து, இரண்டு நலன்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்த்தார். அந்த வழக்கின் முடிவில் உச்சநீதிமன்றம், அரசின் நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்த பிறகு, தேர்தல் கமிஷன் மீண்டும் அவரையே தனது வழக்கறி ஞராக நியமித்தது. 

ஒரு மூத்த வழக்கறிஞர், அவரும் நீதிபதி முரளிதர் காலத்தில் தனது வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய வர் - கருத்து தெரிவிக்கையில், “அப்போது பெரும் வழக்கறி ஞர்கள், நானி பால்கிவாலா போன்றவர்கள்(அவர் சேஷ னுக்காக வாதாடினார்),  அந்த வழக்கில் வாதாடினாலும், நீதிபதி முரளிதரின் பங்களிப்பு சிறியதாக இருந்தாலும் தனி முத்திரை பதித்தது”. மேலும் அவர் கூறுகையில், “அவரின் நேர்மையே அவரின் அடையாளம். சதாசர்வ காலமும் சக நீதிமன்றப் பணியாளர்களால் ஒவ்வொருவரைப் பற்றி விமர்சனத்துக்கு உள்ளாகும் தொழிலில்,  அவருக்கு எதிராக ஒரு விஷயம்கூட இருந்தது கிடையாது” என்றார்.  நீதிபதி முரளிதரர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் நிலையான வழக்கறிஞராக பணியாற்றியவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் சட்ட உதவி குழுவில் சிறப்பாகப் பணி யாற்றியவர். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு அவர் சட்ட கமிஷனில் 2002ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் பகுதிநேர உறுப்பி னராகப் பணியாற்றினார். முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை, “சட்டம், வறுமை மற்றும் சட்ட உதவி: குற்றவியல் நீதிக்கான வழி” என்ற புத்தகமாக 2004ல்  வெளிவந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து நீதிபதி முரளிதர் தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக தனது 45 வயதில் நியமிக்கப்பட்டார். 

அவருடைய பெயர் அன்றைய தினம் தில்லி உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவால்  கொலீஜியத்தில் பரிந்துரைக்கப்பட்டது. “நீதிபதி கட்ஜூ திறமையானவர்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தவர். மேலும், அன்றைய தினம் உச்சநீதிமன்றத்தின் கொலீஜி யத்தில் இந்திய தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.பி.சபர்வால் இருந்ததும் உதவியது. ஏனெனில் அவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் முன்பு பணியாற்றியவர்” என ஒரு முன்னாள் நீதிபதி தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தில் அவரின் பணிக்காலத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் கிடையாது என்று நீதியரசர் ஏ.பி.ஷா தலைமையில் தீர்ப்பு அளித்த பெஞ்சில் நீதிபதி முரளிதரும் உண்டு. 

2010ல் இந்திய தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குட்பட்டது என்ற தீர்ப்பை அளித்தார். மேலும், தகவல் உரிமை ஆர்வலரின் வழக்கை ஏற்று, நீதிபதிகளின் சொத்துக்களை பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு அசாதாரணமான எதிர் வினையாக அன்றைய தலைமை நீதிபதி, நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன், நிர்வாக அவதா ரத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து நீதித்துறை  அவதாரத்தின் முன்பாக வழக்கு நடத்தினார். நீதிபதி பாலகிருஷ்ணன் வரு மானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். கடந்த நவம்பர் மாதம், உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்து 9 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நீதிபதி முரளிதர் அளித்த தீர்ப்பை ஏற்றது. 

2018 அக்டோபரில், நீதியரசர் முரளிதர் மற்றும் நீதிய ரசர் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் விசாரணை நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமாரை விடுவித்ததை எதிர்த்து தீர்ப்பு வழங்கியது. விசாரணை நீதிமன்றம், சாட்சியங்களை “தவறான கருத்துக்களின்” அடிப்படையில் பரிசீலனை செய்தது என்றும், தில்லி காவல்துறை “அப்பட்டமாக கலவரங்களுக்கு துணை போனது” என்றும் குற்றம் சாட்டினார்.  அதே மாதத்தில் நீதியரசர் முரளிதர், பீமா கொரேகான் வழக்கில் சமூக சேவகர் நவ்லக்கரை கைது செய்து தில்லி  அழைத்து வர டிரான்சிட் ரிமாண்ட் உத்தரவை இரத்து செய்து, புனே காவல் துறையின் நடவடிக்கையில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினார். அந்த வழக்கு சமீபத்தில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. காரணம் புதிதாக பதவியேற்ற சிவசேனா என்.சி.பி அரசு  பீமா கொரேகான் வழக்கு வலுவான சட்டங்களின் மீது கட்டப்பட்டதில்லை என்று கருதியதால் அந்த வழக்கு என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டது. 

2018 நவம்பரில் நீதியரசர் முரளிதர் மற்றும் நீதியரசர் கோயல் அடங்கிய அமர்வு 1987ல் ஹசிம்புரா படுகொலை யில் 42 முஸ்லீம்களை கொன்ற 16 முன்னாள் காவல் அதிகாரிகளை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததை இரத்து செய்து அந்த காவல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கினர்.  ஒரு நீதிபதியாக, நீதிபதி முரளிதர், வழக்கறிஞர்கள் தன்னை லார்ட்ஷிப் என்றும் மைலார்ட் என்றும் அழைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், நீதிமன்ற உத வியாளர்கள் இவர் அமரும் நாற்காலியை இவர் அமர ஏது வாக நகர்த்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

நீதிபதி முரளிதரை தில்லி உயர்நீதிமன்றத்தில் கடைசி நாளில் பார்க்கப் போன வழக்கறிஞர் ஒருவர், “அவர் நீதிபதி யாக அல்ல, சாதாரண மனிதனாகக் கூட எந்த வகையிலும், விலைபோகதாவர்” என்று தெரிவித்தார்.  ஏதாவது ஒரு மைனஸ் பாயிண்ட்டை சுட்டிக் காட்டவும் என்றதும், நீதிபதி முரளிதர் முன்பு பல வழக்குகளை நடத்தி யுள்ள ஒரு வழக்குரைஞர், “உண்டு! நீங்கள் ஒரு கிரிமின லுக்கு ஆதரவாக வழக்கு நடத்துகிறீர்கள் என்றால் நீங்கள் அவரை வெறுப்பீர்கள். அவர், நீங்கள் தவறு என நினைத்தால், குறிப்பாக சமூக விசயங்களில், உங்கள் வாதங்களால் எந்தப் பயனும் இல்லை…..ஏனெனில் அவர் உங்களுக்கு எதிராக தீர்ப்பளித்துவிடுவார்…..”

புதன்கிழமையன்று தற்செயலாக தில்லி கலவர வழக்கு அவரது நீதிமன்றத்திற்கு வந்தது, ஏனெனில் அன்றைய தினம் தலைமை நீதிபதி டி.என். பாடீல், மற்றும் இரண்டாவது சீனியர் நீதிபதி ஜி.எஸ். சிஸ்டானி இருவரும் விடுப்பில் இருந்தனர்.  ஆனால், கடைசி வழக்கு நீதிபதி முரளிதர் அவர்களால் கேட்கப்பட வாய்ப்பு இல்லை. தற்போதிலிருந்து 2023 ஆண்டு அவர் ஓய்வு பெறும்வரை, அதற்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு பணி உயர்வு அளிக்கப்பட்டாலொழிய!

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மார்ச் 1, 2020 தில்லி பதிப்பு  தமிழாக்கம் : தூத்துக்குடி க.ஆனந்தன்