tamilnadu

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த உள்ளாட்சி ஊழியர்கள் கோரிக்கை

பழனி:
பழனி நகராட்சி உள்ளாட்சி ஊழியர் பேரவை என்.ஆறுமுகம் தலைமையில் பழனியில் நடைபெற்றது,

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.509-ஐ வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிக்கு வரமுடியாத அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு அந்தக் காலத்தை விடுப்பு மற்றும்பனிக்காலமாக அறிவித்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தூய்மைக் காவலர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் தொகுப்பு வீடுகள்கட்டித் தரவேண்டும். ஒப்பந்த ஊழியர்களைநிரந்தரப்படுத்த வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். பழனி நகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக தூய்மைக் காவலர்களை நியமிக்க வேண்டும். பேரவையில் ஊரகத்துறை உள்ளாட்சி சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர் கணேசன், பி.மாறன், கே.பிச்சைமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் பேரா. சோ.மோகனா ஆகியோர் கலந்து கொண்டனர், 

நிர்வாகிகள் தேர்வு: தலைவர் என்.நாச்சிமுத்து, துணைத் தலைவர்கள்: என்.ஆறுமுகம், கே.மாரியம்மாள் செயலாளர்: பி.மாரியப்பன், பொருளாளர்: பி.மாறன், இணைச்செயலர்கள்: கே.ஆறுமுகம் ,அம்சவல்லி உள்ளிட்ட 18 கமிட்டி உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.