tamilnadu

img

ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை எரித்த விவசாயிகள்

தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவ பொம்மையை எரிப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி, மிகப் பெரிய தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உருவ பொம்மைகளை எரித்துள்ளனர் பஞ்சாப் விவசாயிகள்.

வட இந்தியாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராவணன் உருவ பொம்மைகள் எரிப்பது வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது. இதற்காக, அதிக அளவில் பல ஆதி உயரமான ராவணன் பொம்மைகளை வைத்து, முடிவில் தீயிட்டு எரிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு அதற்கு மாறாக பஞ்சாப்பில் ராவணன் உருவபொம்மை எரிப்பதற்கு பதிலாக பாரதீய கிஸான் யூனியன் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் வினோதமாக கைபிடித்துள்ளனர். மத்திய அரசின் விவசாய விரோத கொள்ளைகளை எதிர்த்து பிரதமர் மோடியின் பல ஆதி உயர பொம்மைகளை தயார் செய்துள்ளனர். மத்திய அரசின் சட்டங்களால் அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் தான் பயனடைகிறார்கள் என்று கூறி அவர்கள் பொம்மைகளையும் எரித்துள்ளனர். பஞ்சாப்பின் பல பகுதிகளில் இதே போல மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளது.