பஞ்சாப் மாநிலத்தின் பட்டாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ்.பர்மார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பட்டாலாவில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே உள்ள பட்டாசு ஆலையில், இன்று மாலை 4 மணி அளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ்.பர்மார் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோரை அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.