tamilnadu

நேபாள விடுதியில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர் மர்ம மரணம்

காத்மண்ட், ஜன.21- நேபாள நாட்டின் டாமன் நகரில் உள்ள உணவகவிடுதி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த 8 பேர்  உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.  இதுகுறித்து மக்வான்பூர் நகர காவல் அதிகாரி சுஷில் சிங் ரத்தோர் கூறுகையில், உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. உணவகவிடுதி அறையில், அவர்கள் ஹீட்டர் பயன்படுத்தி உள்ளனர். அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்றார்.

;