tamilnadu

img

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 10,385 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. 27,380 போலீசார் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 38 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், மாயமான 30 பேரை தேடி வருகின்றனர். 

மேலும், அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம், இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை அதிகமாகவே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அச்சமடைந்து உள்ளனர்.