tamilnadu

img

ஈவோ மொரேல்ஸ் பலவந்தமாக ராஜினாமா

பொலிவியாவில் அமெரிக்கக் கைக்கூலிகள் வன்முறை வெறியாட்டம்

சூழ்ச்சி செய்து ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது அமெ.  ஏகாதிபத்தியம்

சுக்ரே, நவ.11- லத்தீன் அமெரிக்க கண்டத்தின்  மாபெரும் இடதுசாரி தலைவர் களில் ஒருவரும், பொலிவியா ஜனாதி பதியுமான ஈவோ மொரேல்ஸ், அமெரிக்க கைக்கூலிகளால் அராஜகமான முறையில் பலவந்த மாக ராஜினாமா செய்ய வைக்கப் பட்டுள்ளார். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அவரது ஆட்சி, பலவந்தமாக கவிழ்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அரங்கேற்றியுள்ள இந்த அட்டூழி யத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் மிக  முக்கிய நாடுகளில் ஒன்று பொலி வியா. வளங்கள் நிறைந்த, பழங்குடி மக்களின் உழைப்பும், வாழ்வாதா ரங்களும் மிக நீண்டகாலமாக சுரண்ட ப்பட்டு வந்த பொலிவியாவில், இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ், கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் வெனிசுலா தலைவர் சாவேஸ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, பொலிவிய பழங்குடி மக்களை அணிதிரட்டி, சோசலி சத்திற்கான பேரியக்கம் எனும் கட்சி யை உருவாக்கி, மக்கள் செல்வா க்கை பெற்று ஆட்சியில் அமர்ந்தார். 2 முறை ஜனாதிபதியாக இருந்த அவரது ஆட்சியில் பொலிவியா, வறுமையிலிருந்து தனது மக்களை மீட்டது. இந்நிலையில் அக்டோபர் 20 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக ஈவோ மொரேல்ஸ் மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அதை அறி விக்கக் கூடாது என்றும், அறிவித்தால் பெரும் வன்முறையில் ஈடுபடுவோம் என்றும் எதிர்க்கட்சிகள் என்ற பெய ருடன் இயங்குகிற அமெரிக்க கைக்கூலிகளான வலதுசாரி பிற்போக்குவாத கட்சித் தலைவர் களான கர்லோஸ் மெசா மற்றும் லூசி கமாட்சோ ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். பொலிவியாவில் அக்டோபர் 20 ஜனாதிபதி தேர்த லுக்கு முன்பும், பின்பும், பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட னர். எனினும் அதை எதிர்கொண்டு, மிகுந்த நிதானத்துடன் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி, அதில் வெற்றியும் பெற்றது மொரேல்ஸ் அரசு. முதல் சுற்றில் அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், பொலிவியாவில் பல் வேறு பகுதிகளில் அமெரிக்க கைக் கூலிகள் வன்முறையை தீவிரப்படுத்தி னர். இந்நிலையில் அவர், இரண்டா வது சுற்றிலும் வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்றார்.

இதனிடையே, அமெரிக்காவின் சர்வதேச உளவு பிரிவுகள் தீவிரமாக செயல்பட்டு, பொலிவியா ராணுவப் படையின் சில பிரிவுகளை வலது சாரி கைக்கூலிகளோடு கைகோர்க்க செய்துவிட்டனர். இது மொரேல்ஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், தொடர் வன்முறையை காரணம் காட்டி, ராணுவத்தின் சில பிரிவுகள் வலது சாரி சக்திகளோடு சேர்ந்து கொண்டு, மோதலில் ஈடுபடும் சூழலை உரு வாக்கின. இந்நிலையில், ஞாயி றன்று ஈவோ மொரேல்ஸை சந்தித்து  பேசிய மூத்த ராணுவ அதிகாரிகள், பதவியிலிருந்து ராஜினாமா செய் வதை தவிர வேறுவழியில்லை என மொரேல்ஸை நிர்ப்பந்தப்படுத்தினர்.

தேசத்தில் பெரும் வன்முறை நீடித்து ரத்த ஆறு ஓடக் கூடாது என்ற கடுமையான நிர்ப்பந்த சூழலில் ஈவோ மொரேல்சும், துணை ஜனாதிபதி அல்வரோ கார்சியாவும் ராஜினாமா செய்தனர். இப்படியாக பொலிவியாவில் பகிரங்கமாக அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் சதியால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. இது நடக்கப் போகிறது என்பதை சில வாரங்களுக்கு முன்பே வெனிசுலா ஜனாதிபதி மதுரோ  எச்சரித்திருந்தார். கடந்த வார இறுதியில் கியூப தலைநகர் ஹவானா வில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில், பொலிவியாவில் மொரேல்ஸ் அரசை கலகத்தின் மூலமும், வன்முறையின் மூலமும் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சித்து வருகிறது என சுட்டிக்காட்டி, கடும் கண்டனமும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்தீர்மா னம் தற்போது உண்மையாகியுள்ளது.

சிபிஎம் கடும் கண்டனம்

பொலிவியா அரசு கவிழ்க்கப் பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொலிவியாவில் சட்டப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் பலவந்தமாக பதவியிலிருந்து வெளி யேற்றப்பட்டிருப்பது, அப்பட்டமான ஆட்சிக் கவிழ்ப்பு சதி செயலே ஆகும். பொலிவியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கி கொண்டிருக்கும் வலதுசாரி சக்திகள், அக்டோபர் 20 தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து  மிகப்பெரிய அளவில் வன்முறை  வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட்டன. ஆயுதப் படையினரில் சில  பிரிவுகள், வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டும், இறுதியில் ராணுவமும் அவர்களோடு சேர்ந்து கொண்டும் மொரேல்ஸை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துள்ளன,

முன்பு பிரேசிலும், ஈக்வடாரிலும், வெனிசுலாவிலும் முற்போக்கு ஆட்சிகளை குறிவைத்து இதே போன்ற சூழ்ச்சிகள் அரங்கேற்றப் பட்டதை தொடர்ந்து தற்போது பொலிவியாவிலும் வலதுசாரி சக்தி களின் கலகம் அரங்கேறியிருக்கிறது. பொலிவியாவில் ஆட்சிக்கு வந்த முதல் உள்நாட்டு தலைவர் மொரேல்ஸ். பழங்குடி மக்களின் தலைவரான அவர், வறுமையை ஒழித்துக்கட்டுவதிலும், இயற்கை வளங்கள் மீதான பொலிவிய மக்களின் இறையாண்மையை உத்தரவாதப்படுத்துவதிலும் மிகப் பெரிய முன்னேற்றங்களை கொண்டு வந்தார். அவரது ஆட்சி பலவந்தமாக கவிழ்க்கப்பட்டி ருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. ஈவோ மொரேல்ஸின் கட்சியான சோசலிசத்திற்கான பேரியக்கத்திற்கு கட்சி தனது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.