tamilnadu

img

நேபாளத்தின் கியால்சென் சிகரத்தின் உச்சியை முதலில் எட்டி 3 பேர் சாதனை

நேபாளத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான கியால்சென் சிகரத்தின் உச்சியினை 3 பேர் முதன்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளனர்.

நேபாளத்தின் ஜுகால் ஹிமால் பகுதியில் கியால்சென் சிகரம் உள்ளது. இது 6,151 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரத்தின் உச்சியினை இதுவரை யாரும் அடைந்ததில்லை. இந்த சிகரத்தின் உச்சியினை எட்ட, கடந்த வெள்ளி அன்று 6 பேர் கொண்ட குழு பயணத்தை துவங்கினர். ஆனால், மழை பெய்ததில் ஏறமுடியாமல் திணறிய 3 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.  

இந்நிலையில், மாயா குருங், சர்மிளா தபா, மிலன் தமங் ஆகிய 3 மலையேறும் வீரர்களும் நேற்று முதன்முறையாக சிகரத்தின் உச்சியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிகரத்தின் உச்சியில் மனிதர்களின் கால் தடம் பதித்தது இதுவே முதன்முறையாகும் என ஜுகால் கிராமப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


;