tamilnadu

img

நெல்லை சாஃப்ட்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் பலி

நெல்லையில் சாஃப்பட்டர் பள்ளியின் கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழமையான டவுன் சாஃப்ட்டர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய் விஸ்வரஞ்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
தகவலறிந்து  பள்ளிக்கு வந்த காவல்துறையினர்  நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.