நெல்லையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று விழுந்த நிலையில் எதிர்பாராத விதமாக மரம் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை இருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பத்தமடை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்துக்காக பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் காதர் என்பவரும் ரகுமத் என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதை கண்டித்து சேரன்மகாதேவி ரவுண்டானா பகுதியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.