tamilnadu

img

நெல்லை: கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி  

நெல்லையில் கால் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.  

நெல்லை – மதுரை நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள்மாணவிகள் திவ்ய காயத்ரி, பிரிடா ஏஞ்சலின் ராணி மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவி படுகாயமடைந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கார் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;