states

img

ஆந்திரா கார் விபத்தில் 5 பேர் பலி  

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார் ஒன்று சாலையோரம் இருந்த தடுப்பில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள சந்தாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதியில் நடைபெறும் குடும்ப விழாவில் பங்கேற்க சென்று கொண்டிருந்தனர். அப்போது விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் நாகார்ஜுன சாகர் கால்வாய் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் மருத்துவமனைக்கு  கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொருவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் விபத்து குறித்து ஆந்திரப்பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.